search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் அரிவாள் தாக்குதல்"

    சங்கரன்கோவிலில் தனியார் கம்பெனி ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பத்தன்று இவர் சங்கரன்கோவிலில் நடைபெற்று பெரும் ஆடித்தவசு திருவிழா மண்டகப்படி நிகழ்ச்சிக்கு வந்தார்.

    அங்கு நடைபெற்ற பாட்டுகச்சேரியின் போது இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதலை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டு சமாதானப்படுத்தி அனுப்பினர்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தளவாய்புரத்தை சேர்ந்த திருமலைக்குமார் (24) என்பவருக்கும் மணிகண்டனுக்கும் இடையே செல்போனில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த திருமலைக்குமார் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் வீரிருப்புக்கு சென்றார். அங்கு வீரிருப்பு பஸ் நிறுத்ததில் நின்று கொண்டிருந்த மணிகண்டனிடம் தகராறு செய்த அவர்கள் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலைக்குமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    ×